தூத்துக்குடி சம்பவம் - 5-ந்தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட ரஜினி

" alt="" aria-hidden="true" />


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


அப்போது போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீசை மட்டும் குறை கூறுவது தவறு என கூறியிருந்தார்.

இதையடுத்து வருகிற 25-ந் தேதி ரஜினிகாந்த் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் 25-ந்தேதி நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினி விலக்கு கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார்.

ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் ரஜினி கூறியுள்ளார்.


Popular posts
20 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் தேனி மாவட்டம் போடி உள்பட 5 நகரங்கள் வெளிநபர்கள் நுழைய தடை
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image
சோளிங்கர் யோக நரசிம்மசாமி கோவிலில், ரோப்கார் அமைக்கும் பணி 3 மாதங்களில் முடிவடையும் - அதிகாரிகள் தகவல்
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image